Friday, March 8, 2013

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்





மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி:
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும்.
சர்வதேச ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய ஒருசில தலைவர்களில் அவர் முதன்மையானவர். இந்தியா போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவைப் பராமரித்தவர்.
உலகம் முழுக்க கம்யூனிஸ்ட் நாடுகள் பலவீனம் அடைந்திருக்கும் நிலையில் வெனிசுலாவை வலிமைமிக்க நாடாக மாற்றிக் காட்டியதில் அவருக்கு பெரும் பங்குண்டு.
குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும், மறக்க முடியாத உலகத் தலைவர்களின் வரலாற்றில் அவர் இடம்பெறுவது உறுதியாகும். அவரது மறைவால் வாடும் இடதுசாரி தோழர்களுக்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
(எம். தமிமுன் அன்சாரி)





source : tmmk.in 

தமிழ்நாடு சர்வோதய மண்டல் அகில இந்திய மதுவிலக்குக் கவுன்சில் கூட்டம் சார்பாக சென்னையில் மதுவிலக்கு மாநாடு




தமிழ்நாடு சர்வோதய மண்டல் அகில இந்திய மதுவிலக்குக் கவுன்சில் கூட்டம் சார்பாக சென்னையில் 2.03.2013 அன்று மதுவிலக்கு மாநாடு நடைபெற்றது. மக்கள் நலனைப் பேணக்கூடிய அரசு, வருமானத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மதுவிலக்கை அமுல்படுத்தாது மதுவிற்பனையில் ஈடுபடுவது சரியான பொருளாதார நடவடிக்கையாக இருக்காது வலமான வ-மையான தமிழ்நாடு அமைய பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என நடைபெற்ற இம்மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்..எச்.ஜவாஹிருல்லா, பட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் மரு. ராமதாஸ், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குமரி ஆனந்தன், மதிமுக மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கௌதம சன்னா உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பல்வேறு மாநிலங்களில் மது விலக்குக்கான போராடிவரும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.






Source : tmmk.in


சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே


சவூதியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் எனதருமை தமிழ் சொந்தங்களே


சமீப காலமாக நமதருமை சகோதரர்களில் சிலர் விடுமுறையில் தாயகம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற போது எதிர்பாரா விதமாக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.
தாயகமும் செல்ல முடியாமல் விமான நிலையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்கிக்கொள்ளவும் முடியாமல் விக்கித்து நின்ற அவர்களின் பரிதாப நிலை கண்டு என்னால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது.
இப்போது என் கதியும் அதே நிலைதான்.விசயத்திற்கு வருகிறேன்,
நாம் நமது அத்தியாவசிய பயன்பாட்டிற்காக நமது இகாமாவில் ( STC,ZAIN,MOBILY )போன்ற கம்பெனிகளில் சிம் கார்டு பெற்று அதை முறையாக பயன்படுத்தி வருகிறோம்.
நம்மில் சிலர் ஒன்று அல்லது இரண்டு சிம் கார்டுகள் வைத்திருப்பது இயல்பு.
இப்போது பிரச்சினை என்னவென்றால் நமக்கே தெரியாமல் நம்முடைய இகாமாவில் வேறு யார்,யாரோ சிம் கார்டுகளும்,நெட்கார்டுகளும் பெற்று பயன்படுத்திவருவதால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாம் பலியாகி விடுகிறோம்.
இப்படி ஒருவர் இகாமாவில் வேறொருவர் நெட்சிம்கார்டு வாங்கி தாறுமாறாக பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சவூதி ரியால்களுக்கு பில் பாக்கி வைத்து விட்டதால்,
யாருடைய பெயரில் சிம்பெறப்பட்டதோ அவர் ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு விடுகின்றனர்.
அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்களில் ஒருவர்தான் தமிழ் சகோதரர்.
நிலுவைத்தொகை முழுவதையும் திருப்பி செலுத்தாத வரை இந்த நபர் சவூதியை விட்டு வெளியேற முடியாது.
இந்த தவறுகள் எப்படி நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
தற்போது எனது இகாமாவில் எனக்கே தெரியாமல் 9 சிம்கார்டுகளும்,5 நெட்சிம்கார்டுகளும் STC மூலம் பெறப்பட்டு யார் யாரோ பயன் படுத்தி வருவதை கண்டு நொந்து போய் விட்டேன்.
உடனடியாக STC தலைமை அலுவலகம் சென்று புகார் செய்து விட்டேன்.
அவர்களும் எனது புகாரை பதிவு செய்து விட்டு 24 மணி நேரத்தில் இல்லீகலாக செயல்படும் சிம்கார்டுகளின் சேவை நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என சொல்லி 5 நாட்களாகி விட்டன.ஆனாலும் இதுவரை நடவடிக்கை இல்லை.
வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதை போல் உணர்கிறேன்.
இது போல எத்தனையோ நபர்கள் பாதிக்கப்பட்டு சிம்கார்டு அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதை காண முடிகிறது.
விஷயம் தெரிந்தவர்கள் சுதாரித்துக் கொள்கின்றனர் விஷயம் தெரியாதவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டு பயன்பாட்டில் உள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
STC சிம்கார்டு வைத்திருப்பவர்கள் 902 என்ற எண்ணிற்கு 9988 என்ற எண்களை டைப் செய்து மெசேஜ் செய்தால் உடனே நமது இகாமாவில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்ற விபரம் வந்து விடும்.
STC சிம்கார்டு வைத்திருக்கும் சகோதரர்கள் உடனே உங்களது இகாமாவின் நிலைபாட்டை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
ஏதேனும் பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட சிம்கார்டு தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் இது காலத்தின் மிக மிக அவசர அவசியமாகும்

source:tmmk.in

Thursday, March 7, 2013

சசி பெருமாள் மீது காவல்துறை அத்துமீறல் ம ம க கண்டனம்



சசி பெருமாள் மீது காவல்துறை அத்துமீறல் ம ம க கண்டனம்




காந்திய வாதி சசி பெருமாள்; உண்ணாவிரத்தை கெடுக்கும் நோக்கோடு காவல் துறை அவரை வலுக்கட்டாயமாக மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளது.  இந்தஅத்து மீறல் வன்மையாக  கண்டிக்கத்தக்கது   இது தொடர்பாக மம க   தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் பத்திரிகை அறிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம்  இருந்துவரும் காந்தியவாதி சசி பெருமாள் அவர்களை காவல்துரையினர் அத்துமீரலுடன் அவரது உண்ணாவிரதத்தை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்பட்டது வன்மையாக கண்டிகத்தகது,
33நாள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலிவுற்ற பெரியவர் சசிபெருமாலை காப்பாற்றும் நோக்கம் உண்மையிலேயே அரசுக்கு இருந்து இருந்தால் அரசு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகளை ஏற்று அவரை இணங்க செய்திருக்கவேண்டும் . அதை விடுத்து பலபிரயோகம் செய்தமை கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை  கொண்டு வர  அணு தினமும்  பாடுபடும்  மனித நேய மக்கள் கட்சி  சசி பெருமாளின் முயற்சிகளுக்கு என்றும் பெறும் துணையாக இருக்கும்    என்பதை தெரிவிக்கும் அதே வேளையில் அரசு சசிபெருமாளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்  என்றும் கேட்டுக்கொள்கிறோம்
ஜே எஸ் ரிபாயி

தமிழக அரசே பந்த் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்






மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு கொடூரமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் ஒன்றுபட்ட நிலையில், ஐ.நா. பெருமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்க வேண்டும் என தமிழகமே போராடி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடந்த 1983ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களும், தமிழகத்தில் ரயில்களும் ஓடாதவாறு செய்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியும் மறைமுக ஆதரவளித்தார்.
அதேபோன்று, தமிழக முதல்வர் அவர்களும் மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக தமிழகம் தழுவிய கடையடைப்பு அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள், கடந்த 3.3.2013 அன்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியின் போது கோரிக்கை விடுத்தார்.
ஆகவே, அனைத்துலக தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழக அரசே கடையடைப்பு நடத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.
அன்புடன்
(பி.எம்.ஆர்.சம்சுதீன்)

Tuesday, March 5, 2013

ஜவாஹிருல்லாஹ் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் விருது! - ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை






தமிழகத்தில் உள்ள முன்னணி ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருவள்ளுவர் நேர்மை அரசியல் விருது சென்னையில் வழங்கப்பட்டது. இந்த விருதினை தெற்கு மதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அண்ணாதுரை (சி.பி.எம்.), பத்மநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜே. புஷ்பலீலா ஆல்பன் (தி.மு..), ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (...) மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் கே. பாண்டியராஜன் (தே.மு.தி..) ஆகியோர் பெற்றனர். இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பொது செயலாளர் பொறியாளர் எஸ்.எம்.அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆம், வரலாறு படைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஆறு அமைப்புகளின் ஊழல் எதிர்ப்பு போராளிகள், ஊழலுக்கு எதிரான நேர்த்தியான கூட்டணி அமைத்து, நான்கு நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு விருதுகளும் வழங்கியுள்ளனர். சென்னை எதிராஜ் சாலையில் உள்ள பெண்களுக்கான எதிராஜ் கல்லூரியின் கேளரங்கில் - பரிசளிப்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 11, 2012 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. பெருந்திரளானவர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 90 வயதை தாண்டிய - திருப்பூர் பஞ்சாயத் யூனியனின் முன்னாள் தலைவர் - திரு வி.பொன்னுலிங்கம் - இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இலக்கிய செல்வர் திரு குமரி அனந்தன் - நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மூன்று உறுப்பினர்களுக்கு பொன்னாடை போத்தி, நினைவு பரிசுகளையும் வழங்கினார். அவர் - தனது வாழ்த்துரையில் - நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ்ந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரை பற்றி குறிப்பிட்டார். இந்த கால அரசியல்வாதிகள் - காமராஜரின் வாழ்கையை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர் போல் வாழ முயற்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
திரிபுரா மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் திரு பி.எஸ். ராகவன் IAS - ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் வடிவமைத்துள்ள பரிசளிப்பு திட்டத்தை மிகவும் பாராட்டி பேசி, இதனை நாட்டிலேயே ஒரு முன்னோடியான முயற்சி என கூறினார். ஒரு நேர்மையான சமுதாயத்தை உருவாக்க முனைந்திடும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்து கூறிய அவர், விருதுகளை வென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுதல் தெரிவித்தார்.
புதிய தலைமுறை ஊடகத்தின் ஆசிரியர் மாலன் மற்றும் பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோர் - ஊழலையும், லஞ்சத்தையும் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாது என கூறி, அதை எதிர்த்து எதையும் செய்ய துணியாத பொது மக்களின் நிலைப்பாட்டை கண்டித்தனர். ஊழல் எதிர்ப்பு போராளிகளின் தற்போதைய முயற்சி மக்களின் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விருதுகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் - தற்போது போல், எப்போதும் சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்க முயற்சி செய்வோம் என்றும், இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களாக தொடர்ந்து செயலாற்றுவோம் என்றும், இந்த விருதுகளுக்கு பின்னால் உள்ள நெறிகளை உயர்த்தி பிடிப்போம் என்றும் உறுதி கூறினர்.
ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொது செயலாளர் திரு எஸ்.எம். அரசு - தனது வரவேற்புரையில் மூன்று விசயங்களை - சம்மந்தப்பட்ட அனைவரின் பரிசீலனைக்கும் எடுத்து வைத்தார்.

1) மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், பிற கட்சிகளின் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் - நாட்டுக்கும், மக்களுக்கும் தன்னலமற்ற சேவை புரிய தியாகம் செய்யவேண்டிய துறையாகவே அரசியலை பார்க்க வேண்டும். பொருளாதார வசதிகளை தேடுவோர் அரசியலை தேர்வு செய்ய கூடாது. அதனை நாடுவோர் - அதற்கு என உள்ள பிற பாதைகளை தேடி கொள்ளட்டும்.
2) ஒதுங்கிவிட்டு, பின்னர் வெளியில் இருந்து புலம்பாமல், நல்ல, சரியான சிந்தனைக்கொண்ட, நேர்மையானவர்கள் - இந்த நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிட துணிந்து வரவேண்டும். தீயவர்களால் தீமை நடப்பதில்லை; தீயவர்கள் தீவிரமாக செயலாற்றும்போது, அதனை எதிர்த்து ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் (தீமை) நடக்கிறது.
3) நாட்டினர் முன் மிக கடினமான பணி உள்ளது. தங்களின் பிரதிநிதிகளாக செயல்பட நல்ல, நேர்மையானவர்களை அடையாளம் கண்டு, தேர்தலின் போது, அந்த நாட்டு பற்று மிக்கவர்களுக்கு - அவர் எந்த கட்சியினராக இருந்தாலும், யார் தலைவராக இருந்தாலும், எந்த கொடியினை கொண்டவராக இருந்தாலும், எந்த சின்னத்தை கொண்டவராக இருந்தாலும் - அவருக்கு வாக்களிக்க வேண்டும்.

பிரதிநித்துவ மக்களாட்சியில் - ஊழலற்ற நிர்வாகத்தினை நடத்திட இந்த மூன்று கொள்கைகளும் மிகவும் அவசியம்.
நிகழ்ச்சியினை நெறிப்படுத்திய ஐந்தாம் தூண் (5th Pillar) அமைப்பின் தலைவர் திரு விஜய் ஆனந்த் பேசுகையில் - தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை இந்த ஊழலுக்கு எதிரான கூட்டமைப்பின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார். ஊழல் எதிர்ப்பு அமைப்பின் கோவை பிரிவை சார்ந்த திரு சேலக்கரைச்சல் .ஸ்ரீதர் - ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அதனை கூட்டத்தினர் ஒன்றாக வழிமொழிந்தனர்.
இந்த திட்டத்திற்கான வேலைகள் - மே மாதம் துவங்கியது. இறுதி பரிசளிப்பு நிகழ்ச்சிகளை - ஐந்தாம் தூண் அமைப்பின் செயல் இயக்குனர் திரு கே. பானுகுமார், தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் தலைவர் திரு எல்.எஸ். ஜெகநாதன், தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் திரு சந்திர போஸ், அதன் தலைமை நிலைய செயலாளர் திரு வி.ஆர்.சந்திரன், அதன் மக்கள் தொடர்பு செயலாளர் திரு .நபீஸ் அஹமத், அதன் செயல் திட்டங்கள் செயலாளர் திரு ஜேம்ஸ் ராஜநாயகம், அலுவலக மேலாளர் திருமதி தில்சத் பேகம் ஆகியோர் திறனாக ஏற்பாடு .செய்திருந்தனர்.
நேர்மை குறித்த அக்கறை இந்நாட்டில் - குறிப்பாக அரசியலில் - மிகவும் குறைவாக உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் பற்றி விவரிக்கும் ஐக்கிய நாட்டு சபையின் ஓர் ஆவணத்தில் - இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, "நேர்மை என்ற சொல்லுக்கு இந்தியர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை" என பதியப்பட்டிருப்பதாக கூறுவர். எவ்வளவு வெக்கப்படவேண்டிய விஷயம்!
இந்த கூட்டமைப்பானது - தமிழக சட்டமன்றத்தின் நேர்மையான உறுப்பினர்களை அடையாளம் காண ஒரு வழிமுறையை வடிவமைத்து, அவர்களை கவுரவிக்க முடிவுசெய்தது. நேரடி மற்றும் ஆழமான 26 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் நிரப்பி அனுப்பும்ப்படி, 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அது அனுப்பப்பட்டது.
பதில் அளிக்க விரும்பாத நேர்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என ஒத்துக்கொண்டாலும், நல்ல உறுப்பினர்கள்:ஊழல்புரியும் உறுப்பினர்கள் விகிதம் - மிகவும் வருந்தக்கூடிய அளவில் உள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில், அரசு சாரா அமைப்புகளின் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டியது கடமை என்று கருதி, பதில் கூறிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் கவுரவிக்க முடிவுசெய்யப்பட்டது.
ஊழல் போக்கை தடுத்து நிறுத்த ஒரு புரட்சி அவசியம். அதன் பிறகு கலாசார மாற்றத்தை கொண்டு வரவேண்டும். இந்த விருது வழங்கும் திட்டம் - அந்த திசையில் ஒரு சிறு முயற்சி. இது பலரின் பாராட்டுதலையும், சிலரின் எதிர்ப்பினையும் பெற்றுள்ளது. இது நேர்மையான உறுப்பினர்களை உற்சாகபடுத்தும் என்றும், நேர்மை மற்றும் தன்னலமற்ற எண்ணத்தை பிற அரசியல்வாதிகளிடம் விதைத்திட இது உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம். நடப்புகள் கண்டிப்பாக - இன்றில்லாவிட்டாலும், ஓர் நாள் மாறும்.
இந்த நிகழ்ச்சிக்கு தொடர்பாக - கல்லூரி மாணவர்களுக்கு என ஆங்கிலத்திலும், தமிழிலும் - அரசியல் ஊழலை எதிர்க்க மாணவர்களிடம் உள்ள செயல்திட்டம் (Students Strategy in combating Political Corruption) என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த செய்தி நாடு முழுவதும் பரவி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள திட்டமிட்டும், நாட்டு பற்றுடனும் செயல்படும் அனைத்து அமைப்புகளுக்கும் எழுச்சியூட்ட வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: காயல்பட்டணம்.காம்